குச்சவெளி பகுதியில் நெதர்லாந்து பிரஜை ஒருவர் பலி…!!!
திருகோணமலையில் குச்சவெளி – புறாத்தீவு பகுதி கடலில் நீராடிக்கொண்டிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
17 பேர் கொண்ட குடும்பமாக இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த நெதர்லாந்து நாட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 10.55 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் 73 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில்உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொதுவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.