இலங்கை ஜனாதிபதி சீனாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் – கம்மன்பில தெரிவிப்பு..!!
கொழும்பில் அமைந்துள்ள தெற்காசியாவின் உயரமான கட்டிடமான தாமரை கோபுரம் கோபுரத்தை நிர்மாணிப்பதில் 200 கோடி ரூபாய் நிதி மோசடி நடைபெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கோபுரத்தின் திறப்பு விழாவின் போது கூறியதன் மூலம் சீனாவின் நற்பெயருக்கும் பெரிய பங்கம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் மீது அன்பு, அக்கறை இருந்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இந்த குற்றச்சாட்டை திருத்திக்கொண்டு சீனாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அது முடியாது என்றால், சீனாவிடம் தனது வருத்தத்தை தெரிவித்து ஜனாதிபதி தனது தாழ்மையை காட்டுவார் என எதிர்பார்ப்பதாகவும் கம்மன்பில கூறியுள்ளார்.