அதிகாரப் போட்டியால் நாடு நாசமாகின்றது என மகிந்த தரப்பு ஆவேசம்.!
அதிகாரப் போட்டியால் நாடு நாசமாடைந்து வருகின்றது இதனை நாங்கள் ஒரு போதும் விரும்பவில்லை. என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான திடமான முடிவொன்றை உடனடியாக எடுக்கவேண்டும் எனவும் கூறினார்
இதனை தொடர்ந்து மஹிந்த அணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தார்.
இலங்கையின் அரசியல் முடிவற்ற நிலையில் காணப்படுகின்றது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையிலான அதிகாரப் போட்டியால் யார் பேச்சையும் கேட்காமல் அவர்களே முடிவு எடுக்கிறார் என்று அமைச்சர்கள் கூறியுள்ளனர்.இந்த அதிகாரப் போட்டியால் நாட்டின் பொருளாதாரமும் சுதந்திரமும் பாதுகாப்பும் ஆகியன கேள்விக்குறியாகியுள்ளது.
இதனால் உயிர்த்த ஞாயிறன்று முஸ்லிம் பயங்கரவாத தாக்குதல் இலகுவாக மேற்கொள்ளப்பட்டது இதற்கு தீர்வு தேர்தல் ஒன்றுதான் ஒரே வழி.எனவும் கூறினார்.நாங்கள் என்ன கூறினாலும் நாட்டின் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவே., இலங்கையின் நிரந்தரமற்ற அரசியல் நிலைக்கு அவர்தான் தீர்வுகாண வேண்டும்.
மஹிந்த ராஜபக்ச யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் நாட்டையும் பாதுகாத்து சுதந்திரத்தை நிலைநாட்டினார். ஆனால் இன்று அதிகாரப் போட்டியால் பின்னடைந்தும் நாடு நாசமாகின்றதை நாம் பார்க்கின்றோம் எனவும் இதற்கு ஜனாதிபதி அவசர முடிவொன்றையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும்அவர் குறிப்பிட்டுள்ளார்.