பண்டாரகமவில் இரு முஸ்லிம் பெண்களை தாக்கிய நபர்கள் கைது…!!!
இலங்கையில் பண்டாரகம பகுதியில் இரண்டு முஸ்லிம் பெண்களை தாக்கி தலைமறைவாக இருந்த 10 முஸ்லிம் நபர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரகமவில் உள்ள வீடு ஒன்றில் புகுந்து கடந்த மார்ச் 24 ஆம் திகதி முஸ்லிம் குழு ஒன்று குடும்ப பெண் ஒருவரையும், அவரது தாயாரையும் தாக்கியிருந்தனர்.
பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் துணையுடன், பின்னர் அந்த பெண் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடத்தியுள்ளார்.
அதில், முஸ்லிம் மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் சிங்கள ஆண் ஒருவரை திருமணம் செய்ததை பொறுக்க முடியாத பள்ளிவாசல் நிர்வாகம் தன்னை அச்சுறுத்தியதாகவும், வீட்டை விட்டு வெளியேறும் படியும், கணவரை கொல்ல முயன்றதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 6 சந்தேகநபர்களை கைது செய்த பொலிஸார். இருப்பினும் சிலர் தலைமறைவாக இருந்தவர்களும் கைது செய்துள்ளனர். இதேவேளை, இந்த வழக்கில் சாட்சிகளை அச்சுறுத்தியதாக கைது செய்யப்பட்ட பண்டுலகம பிரதேச சபை உறுப்பினர் அப்துல் ஹமீத் முகமது இம்தியாஸ் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்கள் 10 பேரும் பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்