16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிற்கு எதிரான மனு ரத்து..!
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்ட நிலையில் அது செல்லாததாகக் கோரி மனு தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் இந்த மனுவை முன்னாள் காலி மேயர் மெத்சிரி டி சில்வா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விஜித் மலல்கொட, பிரீதி பத்மன் சூரசேன மற்றும் காமனி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இது தொடர்பாக புதிய மனு ஒன்றை சமர்ப்பிப்பதற்காக, ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுவினை வாபஸ் பெறு அனுமதிக்குமாறு மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தை கேலிக்கு எடுக்க வேண்டாம் என மனுதாரரின் சட்டத்தரணிக்கு கடுமையாக எச்சரித்ததோடு, நீதிமன்றத்தின் முன்னிலையில் பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டு இவ்வாறான நகைப்பிற்குரிய நடவடிக்கைளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் மூவரடங்கிய நீதிபதி குழாமின் தலைவர் விஜித் மலல்கொட தெரிவித்துள்ளார்.
அதையடுத்து இந்த மனு நேற்று மாலை தாக்கல் செய்யப்பட்டு விடங்களை உறுதிப்படுத்துவதாக இன்றைய தினம் நீதிமன்றில் அழைக்கப்பட்டுள்ள போது இவ்வாறான கோரிக்கை ஒன்றை முன்வைப்பது பிரச்சினைக்குரியது எனவும் தெரிவித்த நீதிபதி ,இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அதன் உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்துள்ளது.