வெளிநாட்டு தபால் சேவை நடவடிக்கைகள் நிறுத்தப்படவுள்ளது..!!!
இலங்கை முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களில் வெளிநாட்டு தபால் சேவை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த வெளிநாட்டு தபால் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தபால் சேவை சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 6 நாட்களாக தபால் நிலையங்களில் உள்ள கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சிக்கல் தொடர்பாக சிரேஷ்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும் அதனை தீர்ப்பதற்கு இதுவரையில் எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் இந்த சேவை நிறுத்தப்பட்டமையினால் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் தபால்கள் மற்றும் பொதி நடவடிக்கைகளில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.