நண்பர்களுடன் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு..!!!
யாழ்ப்பாணத்தில் அளவெட்டி பகுதியில் நண்பர்களுடன் ஒன்றிணைந்து மது அருந்திக் கொண்டிருந்த வேளையில் நபர் ஒருவர் திடீரென கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் அவருடன் கூட இருந்த ஏனைய நண்பர்கள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் அளவெட்டியைச் சேர்ந்த மதியம் யோகன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.