ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சதொடர்பான முழுமையான தீர்ப்பு நாளை…!!!
ஸ்ரீலங்கா பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமையை சவால் செய்யும் மனுவை நிராகரிப்பதற்கான காரணங்களை உள்ளடக்கிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பும் நாளை தினம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த மாத தொடக்கத்தில், ராஜபக்சவின் இரட்டை குடியுரிமை சான்றிதழ் தவறானது என, இரண்டு சமூக ஆர்வலர்கள் தாக்கல் செய்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், அமைச்சரவை செயல்படாதபோது குடியுரிமை வழங்கப்பட்டதாக மனுதாரர்கள் கோத்தபாயவிற்கு எதிராக வாதிட்டனர். ஆனால் குடியுரிமை விஷயங்களை அந்த நேரத்தில் பாதுகாப்பு அமைச்சு கையாண்டதாக தெரிவிக்கபட்டது.
மேலும் இந்த நிலையில் மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் யசந்தா கோடகொட, அர்ஜுன ஒப்சேகர, மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதிபதி ஆயம், மனுவை தள்ளுபடி செய்வதற்கான காரணங்கள் அடங்கிய இறுதித் தீர்ப்பை நாளை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.