மலையகத்தில் ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைக்க தீர்மானம் – சஜித் பிரேமதாச
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மலையக மக்களுக்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைத்து அவர்களுக்கு தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கையை நேரடியாக தமது பார்வையின் கீழ் மேற்கொள்ள விரும்புவதாக அவர் தீர்மானித்துள்ளார். மேலும் இரத்தினபுரியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மலையக மக்களின் சமுக, கலாசார, பொருளாதார குறை வளர்ச்சி சம்மந்தமாக உடனடியாக அவதானம் செலுத்தப்பட வேண்டும். அதற்கு அமைய தாம் நேரடியாக அவதானிக்கும் வகையில் ஜனாதிபதி செயலணி ஒன்றை தமது ஆட்சியில் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், பெருந்தோட்டப் பகுதிகள் மீள் கட்டமைப்பு முன்னெடுத்து, தென்மாகாணத்தில் இருப்பதை போன்று மலையக தொழிலாளர்களையும் சிறுதோட்ட உடமையாளர்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சஜித் உறுதியாக கூறியுள்ளார்.