ஹட்டனில் ஏற்பட்ட கோர விபத்து…!!! 3 பேர் படுகாயம்..!!
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் குடா ஓயா பகுதியில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 03 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஹட்டன் குடா ஓயா பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று இன்று மதியம் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மூன்று பேரும் டிக்கோயா கிளங்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர். குடா ஓயா பகுதியில் இருந்து ஹட்டன் நகரப் பகுதியை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.