ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச விடுத்த முக்கிய அறிவிப்பு…!!!
இலங்கைத் தமிழர்கள் மீதான சந்தேகத்தை போக்கி அவர்களுக்கு கௌரவத்தை பெற்றுக் கொடுத்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்று வருகின்றது.
மேலும் இந்த கூட்த்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
ஒரு கால கட்டத்தில் இந்த நாட்டில் தமிழ் மக்கள் சந்தேகமாக பார்க்கப்பட்டனர். நாம் அந்த சந்தேகத்தை போக்கி தமிழ் மக்களுக்கு கௌரவத்தை பெற்றுக் கொடுத்துள்ளளோம்.
தமிழ் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டே எனது தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.