கிளிநொச்சியில் இன்று வழமைக்கு மாறாக அதிக பனி மூட்டம்..!!!
இலங்கையில் நுவரெலியா பிரதேசம் போன்று கிளிநொச்சி காட்சி அளித்து வருகின்றது. கடந்த மாதங்களில் பருவமழையை விட அதிகளவான பலத்த மழை பெய்ததால் அந்த மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி காணப்பட்டது. இதனால் மக்கள் கடும் துன்பங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
கிளிநொச்சியில் இன்றைய தினம் வழமைக்கு புறம்பாக அதிக பனி மூட்டம் நிலவியமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
கிளிநொச்சியில் இன்று காலை 9 மணி வரை இந்த சீரற்ற காலநிலை தொடந்து நிலவியது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள், வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள் எனப் பலரும் பல சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
மேலும் இந்த காலப்பகுதியில் இவ்வாறு பனி மூட்டம் நிலவுகின்றதனால் வழமைக்கு மாறான சீரற்ற காலநிலையாக கருதப்படுகின்றது.