பிரான்ஸ்க்கு கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறை சென்றவர்களுக்கு நேர்ந்த கதி..!!!!
இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் நோக்கி பயணித்த 06 பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் கடற்பரப்பில் வைத்து இந்த 6 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 28 – 32 வயதிற்கு இடைப்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இந்த 6 சந்தேக நபர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.