இன்று முதல் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை ஆரம்பம்..!!!
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் பலாலி என்னும் இடத்திலுள்ள படைத்துறை வானூர்தித் தளமும், பன்னாட்டு வானூர்தி நிலையமாக யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் விளங்கின்றது. கடந்த ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் ஏனைய அமைச்சர்கள், பிரபலங்கள் முன்னிலையில் காலை 10 மணி அளவில் இலங்கை ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்துள்ளார்.
அதோடு அங்கு நடந்த பல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டுள்ளனர். இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் விளங்குகின்றது. மேலும் இந்த நிலையத்திலிருந்து நேரடி விமான சேவைகளும் இந்திய பிராந்திய விமான நிலையங்களான சென்னை, திருச்சி மற்றும் கொச்சியிலிருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவை இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த விமான நிலையத்தின் மூலம்இன்று சோதனை விமான ஓட்டம் ஆரம்பிக்கவுள்ளதாக சிவில் விமான அதிகாரசபை தீவிர நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. அதற்கு அமைய இரத்மலானை விமான நிலையத்தில் இன்று பயணிக்கும் விமானம் ஒன்று யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது.
ஒரு மணித்தியாலத்தின் பின்னர் இந்த விமானம் சென்னை விமான நிலையத்தை நோக்கி பயணிக்கவுள்ளது. அங்கு சென்ற விமானம் மீண்டும் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி பயணிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இன்று வர்த்தக விமான சேவைகளை முன்னெடுக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாளை முதல் வர்த்தக விமான பயணங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான அதிகாரசபை அறிவித்துள்ளது.