இலங்கையில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களே உஷார்..!!
குருணாகலில் இருந்து திருகோணமலை வரை பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் பயணம் செய்த பெண் ஒருவருடன் அதே பேருந்தில் பயணித்த 45 வயதுடைய நபர் ஒருவர் நட்புறவை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் அந்த பெண்ணிற்கு குடிபானம் ஒன்றை வழங்கி அதனை குடிக்க கொடுத்தார். அந்த குடிபானத்தை குடித்த பெண் மயக்கமடைந்தார். அதனை தொடர்ந்து அந்த பெண்ணிடம் இருந்த 129,000 ரூபாய் பணம் மற்றும் 550,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
!Advert!
மேலும் குறித்த பெண் திருகோணமலையை சேர்ந்தவராகும். அவர் தனது வீட்டுக்கு போவதற்காக திருகோணமலை நோக்கி பயணிக்கும் பேருந்தில் ஏறியதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
!Advert!
குறித்த பெண் குடிபானத்தை குடித்தவுடன் மயங்கியதை பேருந்தில் இருந்தவர்கள் அவதானித்துள்ளனர். இதனால் சந்தேக நபரை பேருந்துக்குள் வைத்தே மக்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளார். இது போன்ற மோசடியாளர்களிடம் இருந்து நாட்டு மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.