இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு இன்று பிரியாவிடை..!!!
இலங்கை சமகால அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கும் இறுதி அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றும் வாராந்த அமைச்சரவைக் கூட்டம், ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளிலும் இடம்பெறும் இருப்பினும் நாளை போயாதினம் என்றதால் அக்கூட்டத்தை இன்று நடத்த திட்டமீட்டுள்ளனர்.
அதேவேளை இலங்கை சமகால அதிபர் மைத்திரிபால சிறிசேனவிக்கு பிரியாவிடை வைபவம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாராளுமன்றத்தில் விசேட அமர்வு இன்று இடம்பெற்ற நிலையில் குறித்த அமர்வு, இன்று முற்பகல் 11.30க்கு ஆரம்பமாகி 2.30க்கு நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் இறுதி பாராளுமன்ற அமர்வு என்பதுடன் அடுத்த அமர்வு , டிசெம்பர் 3ஆம் திகதியே சபை தொடங்கும் என தெரிவித்துள்ளன