இளம் குடும்ப பெண் ஒருவர் வெட்டி கொலை..!!! கிளிநொச்சியில் நடந்த சோகம்..!!
கிளிநொச்சியில் ஸ்கந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய அன்ரன் ஜெயராஜ் மேரி அகிலா என்ற இளம் குடும்ப பெண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது. அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் 2ஆம் வாய்க்காலில் இந்த சம்பவம் இன்று காலை நடைபெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த பெண்ணின் கணவர் பணிக்காக வவுனியா சென்று இருந்த போது வீட்டில் குழந்தையுடன் இருந்த வேளையில் இந்த கொடூர கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. அதே நேரத்தில் கொலை செய்யப்பட்ட குடும்ப பெண்ணின் உடலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில், நீதிவான் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் இன்னும் விசாரணையில் மேலதிக தகவல்கள் வெளிவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.