ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா யாழில் பிரச்சாரம்..!!!
இலங்கையில் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு முழு ஆதரவையும் வழங்கி முன்னாள் ஜனாதிபதி சந்திாிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திாிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளார்.
இலங்கையில் இடம்பெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கு மக்கள் சந்திப்புக்களில் ஈடுபடவே சந்திரிகா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த நிலையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இண்றைய நாள் முற்பகல் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் உரையாற்றியுள்ளார்.
அதன் போது அவர் மக்களின் பிரச்சனைகள் தேவைகள் தொடர்பாக கேட்டு அதை உடக்குடன் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இந்த சந்திப்பில் மதகுருமார்கள், பொது மக்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.