நாட்டின் காலநிலை மாற்றம்..!!!
இலங்கையில் சில மாகாணங்களிலும், மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 1.00 பின் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நிச்சயமாக சப்ரகமுவ, மத்திய, ஊவா போன்ற மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை போன்ற மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். கிழக்கு மாகாண கடற்கரையோரங்களில் சிறிய அளவான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காலையில் பனி மூட்டங்கலக காணப்பட்டுள்ளது. இடிமின்னல், பலத்த காற்று ஆகியவற்றிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 14 வருடங்களுக்குப் பிறகு சமனல வாவி பெருக்கெடுக்கும் நிலை காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் குறிப்பிட்டுள்ளது.
இரத்தினபுரி, பதுளை மாவட்டங்களில் சில பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்ப்படுகின்றதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பலாங்கொடை, இம்புல்பே, வெலிகேபொல பிராதேச செயலகப் பிரிவுகளிலும், பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை பிரதேச செயலகப் பிரிவிலும் மண்சரிவு அபாயம் ஏற்படுகின்றது.