இலங்கை மக்களே உஷார்..!! உங்கள் தலை முடிக்கு நீங்களே ஆப்பு வைக்காதீங்க?
இலங்கையில் கொழும்பு பகுதியில் பிரபல வியாபார பெயரை தவறாக பயன்படுத்தி தலை முடி வளரும் தவறான தைலத்தை உருவாக்கி விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முழுவதும் தவறான மருந்து தயாரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கொச்சிக்கடை பொலிஸாரினால் கைது செயய்ப்பட்டுள்ளார். கொச்சிக்கடை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மேலும் இந்த நபர் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவருக்கு கீழ் பணியாற்றியுள்ளார். ஆயுர்வேத மருத்துவர் பிரபல வியாபார பெயரின் கீழ் முடி வளரும் தவறான தைலத்தை தனக்கு தெரிந்த மருந்துகளை பயன்படுத்தி தயாரித்து பகிர்ந்துள்ளார்.
சந்தேக நபர் தொடர்பாக மருத்துவரின் கீழ் மருந்து உருவாக்கி இலங்கை முழுவதும் வியாபாரம் செய்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.