மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக மைத்திரி…!!!
இலங்கையில் இன்னும் இரு தினங்களில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் முடிவடைந்த பின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவார் என பதில் தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களில் பெரும்பான்மையானோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என பகிரங்கமாக அறிவித்துள்ளார். மேலும் இந்த கட்சியில் இருந்து பலர் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தால் அதிபர் மைத்திரிபால சிறிசேன சுயாதீனமாக செயற்படுவதற்கு திட்டமிட்டுள்ளார்.
அதனால் இந்த தேர்தல் முவதையும் வரை சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு அதிபர் தீர்மானித்தார். அதேபோல் இந்த தேர்தலின் பின்னர் கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அதிபர் தயாராகி வருவதாக பதில் தலைவர் கூறியுள்ளார். சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இருந்து ஜனாதிபதியினால் எதிர்வரும் கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.