ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படாது – மஹிந்த தேசப்பிரிய
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் தினங்களில்சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.
நேற்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே கருத்து கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், வி.பி.என் (VPN) ஐ தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு தெரிவித்திருந்ததை நான் பார்த்தேன். அது பொய் தகவல், அப்படி ஒன்றும் இல்லை. இருப்பினும், அவ்வாறான நிலைக்கு எம்மை தள்ள வேண்டாம்.
சமூக வலைத்தளங்களில் பதியப்பட்ட விளம்பரங்களை நீக்குமாறு கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன் நடைபெறும் மத நிகழ்வுகளின் வேளையில் வேட்பாளர்கள் குறித்து கூற வேண்டாம். இருப்பினும் சந்தோசத்திற்கு உரிய விஷயம் ஒன்று உள்ளது. நகம் வெட்டியதாக கூட ஒரு முறைப்பாடும் பதிவாகவில்லை. தூற்றி அச்சுறுத்திய சம்பவங்கள் தொடர்பாக மாத்திரமே தேர்தல் வன்முறைகளாக பதிவாகியுள்ளது என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.