இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோத்தபாய ராஜபக்சவிற்கு வாழ்த்து தெரிவித்த மைத்ரிபால சிறிசேன…!!!!
இலங்கையில் நேற்று அமைதியாக நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மதிப்புக்குரிய கோத்தபாய ராஜபக்சவிற்கு மைத்ரிபால சிறிசேன வாழ்த்துக்கள் கூறியுள்ளார். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்ச 6,924,255 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதையடுத்து கோத்தபாய ராஜபக்ச நாளை இலங்கையின் ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவுக்கு உள்நாட்டு தலைவர்கள் முதல் வெளிநாட்டு தலைவர்கள் வரை பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எதிர்கால ஜனாதிபதியான கோத்தபாயவுக்கு வாழ்த்து கூறி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், வரலாற்று வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோத்தபாய ராஜபக்சவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
My heartiest congratulations to the President-elect @GotabayaR on his historic victory!
— Maithripala Sirisena (@MaithripalaS) 17 November 2019