இலங்கைப் பிரதமர் வவுனியாவிற்கு விஜயம்…!!
இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் வவுனியாவில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக பிரதமர் தான் செல்ல வேண்டிய பாதையை விட்டு வேறு ஒரு பாதையில் சென்றுள்ளார்.
இவர்களின் இந்த போராட்டமானது நீதிமன்ற வீதி வழியாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தினை வரை சென்றடைந்துள்ளது. விஷேட அதிரடிப்படையினர், பொலிஸார், கலகம் தடுப்பு பொலிஸார் இந்த போராட்டத்தை தடுப்பதற்காக வீதிகளில் குறுக்கே பேருந்துகளை நிறுத்தியுள்ளார்.
வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என்.பி வெலிகள போராட்டம் மேற்கொண்ட உறவுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சற்று நேரத்தின் பின்னர் காணாமல் போன உறவுகளின் போராட்ட களத்திற்கு பிரதமரை அழைத்து வருவதாக பொலிசார் வாக்குறுதி கொடுத்துள்ளார். காணாமல் போன உறவுகள் தமது போராட்ட களத்திற்குத் திரும்பியுள்ளனர். எங்கே எங்கே எமது பிள்ளைகள் எங்கே என்ற சத்தத்துடன் போராட்டத்தினை நடத்தியுள்ளனர்.
இன்று மாலை வன்னி விமான நிலையத்திற்கு சொப்பர் விமானத்தில் அமைச்சர்களின் சகிதம் வந்திறங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க காணாமல் போன உறவுகளின் போராட்டம் காரணமாக போராட்ட இடத்திற்கு செல்லும் பிரதான கண்டி வீதி வழியாகச் பிரதமர் தனது பயணத்தை மேற்கொள்ளாமல் வவுனியா மணிக்கூட்டுக்கோபுரம் ஊடாக பஜார் வீதி வழியாக இலுப்பையடி சென்று வைத்தியசாலையினை வந்தடைந்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் காரணமாகவே பிரதமர் பிரதான வீதியைப் பயன்படுத்தாமல் வேற விதியினை பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.