ஜனாதிபதியின் மனைவி பயணித்த வாகனத்திற்கு அபராதம் விதித்த பொலிஸார்…!!!
இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சவின் அன்பு மனைவி அயோமா ராஜபக்ச சென்ற வாகனம் பொலிஸாரிடம் சிக்கியதால் அபராதம் செலுத்த நேரிட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அனுராதபுரத்தில் மத வழிப்பாடுகள் நடத்த சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.வீதி போக்குவரத்து சட்டத்தை மீறியமையினால் அவர் பயணித்த வாகனத்தை பொலிஸார் நிறுத்தியுள்ளனர். ஜனாதிபதியின் மனைவி என்றதால் பொலிஸார் குழப்பம் அடைந்துள்ளனர்.
இருப்பினும் எந்த பிரச்சினையும் உருவாக்கி கொள்ள வேண்டாம். தான் வாகனத்திற்குள் இருப்பதனை கூறாமல் தவறை ஏற்றுக் கொண்டு, அபராத பத்திரத்தை தருமாறு அயோமா ராஜபக்ச கூறியுள்ளனர். மத வழிப்பாடு நிறைவடைந்த பின் வீடு திரும்பிய அயோமா,தனக்கு நடந்த சம்பவத்தை தனது கணவனான கோத்தபாய ராஜபக்சவிடம் கூறியுள்ளார். அதற்கு ஜனாதிபதி அபாரத பணத்தை செலுத்தி சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.