எந்த பிரச்சினை வந்தாலும் யார் என்ன சொன்னாலும் மொட்டை கைவிட முடியாது
இலங்கை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணியை உருவாக்கும் போது பொது தேர்தலுக்காக பொதுவான சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணங்கியுள்ளது. இருப்பினும் தற்போது எந்த சூழ்நிலையிலும், யார் என்ன சொன்னாலும் மொட்டு சின்னத்தை கைவிட முடியாது என கடுமையான அழுத்தத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரயோகிப்பதாக குறிப்பிடப்படுகிறது. கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் போன்ற தேர்தல் இரண்டும் அதிகளவில் வெற்றியை பெற்று தந்த மொட்டு சின்னத்தில், எதிர்வரும் பொது தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என பெரமுனவின் முன்னணி ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
தாமரை மொட்டு என்பது தற்போது ஸ்ரீலங்காவில் பிரபலமான தேர்தல் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் வேறு தேர்தல் சின்னத்தின் ஊடாக செல்ல எத்தகைய வாய்ப்பும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதையடுத்து எதிர்வரும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் இடம்பெறும் என்றும் புதிய தேர்தல் சின்னத்தை உருவாக்க போதுமான கால அவகாசம் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்றைய தினம் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் இரு கட்சிகளுக்கும் இடையிலும் ஒற்றுமையை சீர்குலைக்க சிலர் தமக்கு குற்றம் சாட்டினாலும் மொட்டு சின்னத்தை மாற்ற இயலாது என கூறினார்.
எதிர்வரும் பொது தேர்தலில் வெற்றிப்பெறுவது மொட்டு சின்னத்தில் என தற்போது இருந்து தான் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். அதேவேளையில் இந்த விடயம் தொடர்பாக அடுத்த இரண்டு வாரத்திற்குள் ஸ்ரீ.பொ.ஜ.பெ உடன் கலந்துரையாடுவதாக ஸ்ரீலசுக தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலையில் இரு கட்சியும் கூட்டணியாக நாட்காலி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே ஸ்ரீலசுக முடிவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.