இலங்கையில் பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…!!!
இலங்கையில் பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கு போன்ற மாகாணங்களில் இன்று பிற்பகல் பலத்த மழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சீரற்ற காலநிலை மாற்றத்தால் தற்காலிகமாக வீசும் காற்றை விட அதிக காற்றினாலும் மின்னல் தாக்கங்களினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகம் காணப்படுகின்றது. அதோடு மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பல இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அளவான பலத்த மழை செய்யும் எனவும், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அளவான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளனர்.
புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரைஅதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசுவததால் கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்பவர்களும், மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.