கோத்தபாய ராஜபக்ச விடுத்த உத்தரவால் 1000 கோடி ரூபா செலவு தவிர்ப்பு…!!!
இலங்கையின் அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்காக புதிய வாகனங்கள் கொள்வனவு செய்வதனை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தடுத்துள்ளார். அதன் காரணமாக ஆண்டுக்கு 1000 மில்லியன் ரூபா பணத்தை மீதப்படுத்த முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை மக்களுக்கு வரி சலுகையாக வழங்குவதற்கும் ஏனைய சேவைகளுக்காக பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களுக்கு மாத்திரம் வாகனம் கொள்வனவு செய்வதற்காக 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் 3215 மில்லியன் ரூபா கணக்கிடப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு மாத்திரம் வாகனங்களுக்காக 1971 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. தற்போது ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்தினால் 2020 ஆம் ஆண்டில் மாத்திரம் 1000 மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகன காப்புறுத்திகாக செலவிடப்படவிருந்த 300 மில்லியன் ரூபாவுக்கு அதிக பணமும் மக்களுக்காக பயன்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.