தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு மஹிந்த தேசப்பிரிய விடுத்த கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி…!!!
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு மஹிந்த தேசப்பிரிய விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நிராகரித்துள்ளார். மஹிந்த தேசப்பிரியவின் பதவி விலகல் கடிததத்தை நிராகரித்ததை தொடர்ந்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கை ஜனாதிபதி சார்பில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ. ஜயசுந்தரவினால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல், தேர்தல் சட்டத் திட்ட திருத்தம் தொடர்பாக தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக மஹிந்த தேசப்பிரிய தொடர்ந்தும் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் செயற்படுவது அவசியம் என்பது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தீர்மானம் என அறிவிக்கப்பட்டுள்ளது.