15 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது…!!!
திருகோணமலையில் தம்பலாகாமம் பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் ஒருவர் நேற்று இரவு தம்பலாகாமம் பொலிஸார் கைது செய்யப்பட்டார்.
யூனிட் 11, முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் 15 வயதுடைய சிறுமியை 11 மாதகாலமாக காதலித்துள்ளதாகவும் பெற்றோர்களுக்கு தெரியாமல் இரவு வேளையில் சந்தித்து வந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.