தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த முக்கிய அறிவிப்பு..!!!
வடமாகாணத்திற்கு இன்னும் ஆளுநரை நியமிக்காமல் இலங்கை அரசாங்கம் இழுத்தடித்து வருகின்றது. அதிகளவான தீர்மானங்களை எடுக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயம் குறித்து பல தடவைகள் அரசாங்கத்தை நினைவுபடுத்தியதாகவும், வேறு மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு இருந்த ஆர்வம் வடமாகாணத்தில் மட்டும் இதுவரைக்கும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த ஆளுநர் நியமனத்தின் காரணமாக வருட இறுதியில் கொடுக்கப்படவுள்ள இடமாற்றங்கள், மாகாணத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் என்பன செயற்பட முடியாத துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.