இலங்கை வாழ் மக்களுக்கு எச்சரிக்கை…. தீவிரமாக பரவும் இன்புளுவன்சா வைரஸ் நோய்…!!
இலங்கை முழுவதும் இன்புளூவன்ஸா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாக சுகாதார பிரிவு கூறியுள்ளது. அதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
இன்புளூவன்ஸா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அன்டிபயட்டிக் மருந்துகளை பெற்றுக்கொள்வதில் எந்தவொரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்றால் மருத்துவரை நாடி பரிசோதிக்குமாறு கூறப்படுகிறது.
தற்போது இன்புளூவன்ஸா B என்ற வைரஸ் தொற்று இவ்வாறு பரவி வருவதாக IDH வைத்தியசாலையின் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம கூறியுள்ளார். காய்ச்சல், உடல் வலி, சளி , இருமல் ஆகியவைகளே இந்த நோயின் அறிகுறிகள் என மருத்துவர் கூறியுள்ளார். அதற்கு உரிய மருந்துகளை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் அது நிமோனியா வரை கொண்டு செல்லும் ஆபத்துக்கள் இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தும்மல் ஊடாக இந்த தொற்று மற்றவருக்கு பரவுவதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.