யாழ் மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு நோய்..!!
டெங்குக் காய்ச்சல் (Dengue fever) என்றால் டெங்கி காய்ச்சல் அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சலாகும். மனிதர்கள் இடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்று நோய் ஆகும். இது கொசுக்களால் பரவுகிறது. டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டால் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். அந்த வகையில் கடந்த 08 தினங்களுக்குள் யாழ் மாவட்டத்தில் 769 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகள் பெருக்கம் அதிகரித்துள்ளதோடு நோய் பரம்பலும் அதிகரித்து வருகின்றது. மேலும் இது போன்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொண்டு வந்தாலும் வைத்தியசாலைகளில் தினமும் அதிகளவிலான நோயாளர்கள் டெங்கு நோய் சிகிச்சைக்காக்க அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் நாட்களில் இன்னும் அதிகளவிலான நோயாளர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.