ஸ்ரீலங்காவில் உருவாகும் தென்னாசியாவில் ஆறாவது உயரமான கட்டிடம்…!!!
ஸ்ரீலங்காவில் மிக உயரமான கட்டிடமாக அமைக்கப்படும். அது வணிக மற்றும் குடியிருப்பு கோபுரம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு தொடக்கி மூன்று வருடங்களில் நிறைவு பெறும் என கூறப்படுகின்றது. The One Transworks Square இன் தலைவர் ஜானகி சிறிவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த கட்டிடம் தென்னாசியாவில் ஆறாவது உயரமான கட்டிடமாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக தொடர்ந்தும் பேசிய அவர், “இந்த கட்டிடமானது இரண்டு கோபுரங்களை கொண்டிருக்கும். இதன் முதலாவது கோபுரம் 326 மீற்றர் உயரத்தில் 82 தளங்களை கொண்டதாக அமைக்கப்படும். அண்மையில் 42 தளங்களை எட்டியுள்ளதுடன், 20 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளன. 2021 ஆம் ஆண்டு டிசம்பர் இந்த கோபுரம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
2ஆவது கோபுரம் 310 மீற்றர் உயரத்தில் 77 தளங்களை கொண்டதாக உருவாக்கப்படவுள்ளது. 2ஆவது கோபுரத்திற்கான 5 வீதமான பணிகள் முடிந்துள்ளன. 560 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டவுள்ள இந்த திட்டத்திற்கு தற்போது வரை 180 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாக” என தெரிவித்துள்ளார்.