காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய பெண் தற்கொலை முயற்சி…!!
நேற்றைய தினம் காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய பெண் ஒருவரை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். காலி துறைமுகத்தின் பாதுகாப்பில் இணைக்கப்பட்ட கடற்படைப்வீரர்கள், காலி துறைமுக நுழைவாயிலிலிருந்து காலி நகரத்தை நோக்கிய கடலில் ஒருவர் கடலில் மூழ்குவதை அவதானித்துள்ளனர். உடனடியாக, நீரில் மூழ்கிய நபரை மீட்க கடற்படை ஒரு நிவாரண குழுவை அனுப்பியுள்ளது.
கடலில் மூழ்கிய பெண் ஒருவர் கடற்படையால் காப்பாற்றப்பட்டுள்ளார். காப்பாற்றப்பட்ட பெண் காலியில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் கட்டடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். குறித்த பெண்ணுக்கு கடற்படை மருத்துவ உதவியாளர்கள் முதலுதவி வழங்கியுள்ளனர், இந்த பெண்ணிற்கு மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹிக்கடுவையில் வசிக்கும் 48 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் இந்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை கராபிட்டி, வைத்தியசாலை பொலிஸார் மற்றும் காலி துறைமுக பொலிஸார் நடத்தி வருகின்றனர்.