மலையக வாழ் அனைத்து மக்களுக்கும் விடுத்த அறிவிப்பு…!!!
அண்மையில் மலையகத்தில் மழை குறைந்து பனியுடனான குளிர் காலநிலை நிலவுவதால் காரணமாக மலையகத்தின் பல பகுதிகளில், தடிமல், காய்ச்சல் ஆகிய தொற்று நோய் அதிகரித்துள்ளதாக, பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சிறியவர்கள் பெரியவர்கள் என எந்தவொரு பேதமும் இன்றி இந்த தொற்றுநோய் அதிகளவு பரவி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அங்கு டெங்கு நோய் பரவும் அபாயமும் அதிகம் காணப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, தடிமலோ காய்ச்சலோ ஏற்படுமாயின், உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறும் , வீடு மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறும் வைத்திய அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, பதுளை, பண்டாரவளை, தியத்தலாவ, மொனராகலை, மஹியங்கனை, வெலிமடை போன்ற இடங்களிலேயே அதிக தொற்று நோய் ஏற்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.