ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கத்தின் புதிய கொள்கைப் பிரகடனம்..!!!
இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் புதிய கொள்கைப் பிரகடனம் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திறமையான வினைத்திறன் மிக்க பிரஜை – சந்தோஷமாக வாழும் குடும்பம் – ஒழுக்க விழுமியமிக்க சிறந்த பண்புகளைக் கொண்ட சமூகம் ஒன்றை உருவாக்கி அதனூடாகச் சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்புவதே இந்தக் கொள்கை பிரகடனத்தின் முக்கிய நோக்கமாகும்.
2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2025 ஆம் ஆண்டும் வரையான காலப்பகுதியில், விசேட பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தை வளர்ச்சி பெறச் செய்து, உள்ளூர் உற்பத்தியை 6.5 அல்லது அதற்கு மேற்பட்ட மட்டத்தில் பேணுவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தனிநபர் வருமானம் 6500 டொலர் வரை உயர்த்துவதற்கும், வேலையில்லாப் பிரச்சினையை 4 வீதத்திற்கும் குறைவான மட்டத்தில் பேணுவதும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகை, உள்ளூர் உற்பத்தியின் நான்கு வீதத்திற்கும் குறைவாக பேணுவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடைவதற்கு அரசாங்கத்தின் செலவீனம் மற்றும் வருமானத்தை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வதும் இந்தக் கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய நோக்கமாகும். ரூபாவின் பெறுமதியை உறுதியான மட்டத்தில் பேணுவதும் இதன் மற்றுமொரு நோக்கமாக உள்ளது.