இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்… வடக்கு கிழக்கில் களமிறங்கவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி…!!!
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வன்னி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கைக்கு அமையவே இந்த தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் கொழும்பு, கம்பஹா மற்றும் மலையகத்தில் போட்டியிடுவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக ஏனைய கட்சிகளின் தமிழ் அரசியல்வாதிகள் வெவ்வேறுபட்ட கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலும் இந்த நிலையில், மனோ கணேசனும் வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.