உருவாகின்றது 500 அடி நீளமும் 30அடி அகலமும் கொண்ட ஸ்ரீலங்கா தேசிய கொடி..!!
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 500 அடி நீளமும் 30அடி அகலமும் கொண்ட தேசிய கொடி ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை இந்த தடவை சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் , அப்பகுதியின் முக்கிய வீதிகள் மூடப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கு இடையில் சுதந்திர தினத்தின் போது தேசிய கொடிகளை பறக்கவிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், மரங்களை நாட்டி தேசத்தினை செழிப்பாக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
வளமான தேசம், பாதுகாப்பான நாடு என்னும் தொனிப்பொருளில் இம்முறை தேசிய சுதந்திர நாள் கொண்டாடப்படும் நிலையில் இலங்கையின் மிகப் பெரும் தேசிய கொடியினை சீதாவகபுரவிலுள்ள விகாரை ஒன்றில் உருவாக்கப்படுவதாக கூறிப்பிடப்பட்டுள்ளது.