யாழ் பல்கலைக்கழக மாணவிகளின் கைபேசிகளை திருடியதாக சந்தேகிக்கப்படும் 4 பேர் கைது..!!
யாழ் பல்கலைக்கழக மாணவிகளின் மொபைல் போன்களை திட்டியதாக சந்தேகிக்கப்படும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த வாரம் பல்கலைக்கழக மாணவிகளின் கைபேசிகள் திருடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து சம்பத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ கூறினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட பொலிஸார், நல்லூர் பகுதியில் வைத்து மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் திருட்டுப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த பகுதியிலுள்ள தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையின் போது, பல்கலைக்கழக மாணவிகளின் கைபேசிகளை திருடியதை ஒத்துக்கொண்டனர். சந்தேகநபர்கள் 4 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.