சீனாவில் இருந்த இலங்கை மாணவர்களை மீட்டு வந்ததோடு அவர்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்தமை இலங்கைக்கு கிடைத்த இராஜதந்திர ரீதியான வெற்றி – சவேந்திர சில்வா
சீனாவில் கோர தாண்டவமாடும் உயிர்கொள்ளி நோயான கொடிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அந்நாட்டில் சிறைப்பட்டிருந்த இலங்கை மாணவர்களை மீட்டு வந்ததோடு அவர்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சை வழங்கியமை இலங்கைக்கு கிடைத்த இராஜதந்திர ரீதியான வெற்றி என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தியதலாவையிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை வழங்கிய இராணுவ குழுவினருக்கும் அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுஹான் பிரதேசத்தில் பரவிய கொடிய கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து அப்பிரதேசத்தில் வசிக்கும் இலங்கை மாணவர்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கைப் பணிக்கான ஒத்துழைப்பை வழங்கிய இலங்கையின் சமகால ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு மற்றும் ஏனைய துறையினறுக்கு நன்றிகளைத் தெரிவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வானது ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள இராணுவத் தலைமையைகத்தில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“சிறந்த வீரர்களாக அனைவரும் பல்வேறு உயிர் அச்சுறுத்தல்கள் போன்றவற்றிற்கு இடர்பாடுக ளுக்கு மத்தியில் தங்களது உயிர்களைப் பணயம் வைத்து செயற்பட்டனர். இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தலைமைத்துவத்தின் கீழ் எமது நாட்டில் நடைபெற்ற ஒரு சிறந்த செயற்பட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாக இது காணப்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.