மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு..! யாழ்ப்பாணத்தில் நடந்த சோகம்..!!
யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பணி புரிந்து கொண்டிருந்த போது இந்த சோக சம்பவம் ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் சங்கானையை சேர்ந்த 17 வயதுடைய நல்லகுமார் நிசாந்தன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த விற்பனை நிலையத்தின் நான்காம் மாடியில் உருளைக் கிழங்கு வெட்டும் உபகரணத்தில் அவர் வேலையில் இருந்தார். குறித்த இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நிசாந்தன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளதாக மருத்துவ அறிக்கை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கி மயக்கம் அடைந்த நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் முதலே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இளைஞனின் திடீர் இறப்பு விசாரணையை நமசிவாயம் பிரேம்குமார் ஆரம்பித்தார். இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.