ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் பிரதமர் கௌரவமாக விலகிச் செய்வது நல்லது – சரத் பொன்சேகா
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து கௌரவமாக விலகிச்சென்றால் அது அவருக்கு நல்லது என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதுவரைக்கும் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியை வகித்து வந்தது போது என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று வத்தளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கட்சிக்குள் இருந்த நெருக்கடி தற்போது தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.