சிறந்த வினைத்திறனை வெளிப்படுத்திய 110 அரசாங்க நிறுவனங்களுக்கு விருது வழங்கல்..!!
ஸ்ரீலங்காவில் ஆர்ப்பாட்டக்காரர்களை சமாளிப்பதிலேயே என்னுடைய முழுயைான நேரங்கள் வினாகிப் போகிறது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கவலை தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் சிறந்த வினைத்திறனை வெளிப்படுத்திய அரசாங்க நிறுவனங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதன் போது, சிறந்த வினைத்திறனை வெளிப்படுத்திய 110 அரசாங்க நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி,
ஆர்ப்பாட்டக்காரர்களை சமாளிப்பதிலேயே தனது நேரங்கள் சரியாகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையை கேட்பதில் நேரம் போவதால், தேசிய கொள்ளைகள் மற்றும் இராஜதந்திர விவகாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆர்ப்பாட்ட பிரச்சினைகளை அமைச்சுக்களின் செயலாளர்கள் பொறுப்பேற்று கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு என தனியான இடம் ஒன்றை ஜனாதிபதி ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.