ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக ஒரு வாரத்தில் கட்டப்படும் கட்டடங்கள்!!
ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக முல்லேரியா தேசிய தொற்று நோய்கள் வைத்தியசாலையில் இரண்டு புதிய கட்டடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இலங்கை விமானப்படையின் பொறியியல் பிரிவினர் இவற்றை அமைத்து வருகின்றனர். 16 அறைகளை கொண்டதாக இந்த கட்டடங்கள் அமைக்கப்பட்டுவருகின்றது. கடந்த 18 ஆம் திகதி தொடங்கிய இதன் கட்டுமானப்பணிகள் இன்றைய தினம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.