இன்று சாவகச்சேரியில் மேற்கொள்ளப்பட்ட கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை..!!
இலங்கையில் கொடிய கொரோனா வைரஸ் முற்றாக குணப்படுத்த பல நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை இன்றைய தினம் சாவகச்சேரியில் மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பிலிருந்து வந்தள்ள விசேட குழுவினர், விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் சுகாதாரதப் பிரிவினர் இணைந்து மேற்கொண்டு வருகின்ற இந்த நடவடிக்கை யாழ்ப்பாணம் நகரில் ஆரம்பித்து தொடர்ச்சியாக பல்வேறு இடங்களிலும் இந்த செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் சாவகச்சேரிப் பகுதியின் பல இடங்களிலும் கிருமி தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக சாவகச்சேரி பஸ் நிலையம், பொதுச் சந்தை, புகையிரத நிலையம், பிரதேச செயலகம், வங்கிகள் உள்ளிட்ட பல இடங்களிலும் கிரு நீக்கி விசுறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதே போல தொடர்ந்தும் ஏனைய இடங்களிலும் இச் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.