கனகபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றிக்கு சீல் வைப்பு..!!
கிளிநொச்சி கனகபுரம் பகுதியிலுள்ள தனியார் விடுதி ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தள்ளார்.
மேலும் இது தொடர்பில் கூறுகையில்,
சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இன்று குறித்த விடுதி இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த தனியார் விடுதியில் இருந்த மூவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த தனியார் விடுதியின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.