இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 146 ஆக அதிகரிப்பு..!!
இன்றைய தினம் இலங்கையில் புதிதாக மூன்று கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொடிய கொரோனா நோயாளர்கள் புதிதாக 3 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், குருணாகலை, மருதானை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட நபர் மத போதகர் என்றும் அவர் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரியவருகிறது. மொத்த எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ள போதிலும் 18 பேர் பூரணமாக குணமடைந்து வீடு சென்றுள்ளனர். மேலும் 126 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.