கொரோனா வைரசுக்கு பயந்து முகமூடி அணிந்தவர்களுக்கு நாய்களால் ஏற்பட்ட விபரீதம்..!!
உலகையே ஆட்டி படைக்கும் கொடிய கொரோனா வைரசுக்கு பயந்து முகமூடி அணிந்து சென்றவர்களை நாய் கடித்த சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.
நேற்று காலை 8 மணிமுதல் பிற்பகல் 3 மணிக்குள் 41 பேர் இவ்வாறு நாய் கடிக்கு இலக்காகி பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தமக்கு நன்கு தெரிந்த நாய்களிடமே கடி வாங்கியுள்ளனர். அதில் வீட்டு நாய் மற்றும் வேட்டை நாய் என அனைத்து நாய்களும் கடித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.