கொரோனா நோய் தொற்றுள்ளவரை முதலில் கண்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
கொரோனா வைரஸ் தொடர்பில் தவறான தகவல்களை பரப்புவோருக்கு 5 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றுடன் யாராவது கண்டறியப்பட்டால் முதலில் அது தொடர்பில் பொது மக்கள் பொலிஸாருக்கு அல்லது சுகாதார அதிகாரிகளுக்கோ அறிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு இடையில் தவறான தகவல்களை கூறி வைத்தியசாலைகளில் அனுமதிகளை பெறுகின்ற போது வைத்தியசாலைகளின் பணியாளர்களும் தொற்றுக்கு உள்ளாக வேண்டியேற்படும் என்று அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.